Truth from mahabharatha

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்.... ******************************************** மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய் - சாந்தனுவாய்.... ------------------------------- சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய் - கங்கை மைந்தானாய்.. -------------------------------- முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் - பாண்டுவாய்.... ------------------------------ வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும் - சகுனியாய்... ------------------------------ ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு - குந்தியாய்... ------------------------------- குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும் - திருதராஷ்டிரனாய்.... ------------------------------ பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும் - கௌரவர்கள்... ------------------------------ பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே - துரியோதனனாய்... ------------------------------ கூடா நட்பு, கேடாய் முடியும் - கர்ணனாய்... ------------------------------ சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள் - பாஞ்சாலியாய்.. ------------------------------ தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும் - யுதிஷ்டிரனாய்..... ------------------------------ பலம் மட்டுமே, பலன் தராது - பீமனாய்.... ------------------------------ இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே - அர்ஜூனனாய்.... ------------------------------ சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது - சகாதேவனாய்.. ------------------------------ விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது - அபிமன்யூ ------------------------------ நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான் - கண்ணனாய்.... ------------------------------ வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.... வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

Comments

Popular posts from this blog

ALLAH = SHIVA

Go beyond from mind - OSHO

Sadhguru Jaggi Vasudev about truth